கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தேர்தல் பிற்போடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுஜனபெரமுன நிராகரித்துள்ளது.
கொரோனா வைரசினை காரணம் காட்டி சிலர் தேர்தல்களை பிற்போட முயல்கின்றனர் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெறமுடியாது என தெளிவாக தெரிந்துள்ளதால் இந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இடம்பெற்றால் தாங்கள் தோல்வியடைவார்கள் என்பது தெரிந்துள்ளதால் இந்த விடயத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர் என பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தேர்தல்கள் குறித்து அச்சமடைந்துள்ளனர். தேர்தல்கள் நடைபெறுவதை தடுப்பதன் மூலமே தோல்வியை தவிர்க்க முடியும் என அவர்கள் நினைக்கின்றனர். நாங்கள் அந்தளவிற்கு செல்லமாட்டோம். ஆனால் மக்களையும் அவர்களது உடல்நலத்தையும் பாதுகாப்பது எங்களின் முக்கிய கரிசனைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment