Ads (728x90)

நேற்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விபத்து தடுப்பு வாரம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் வீதிப்போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் விபத்துகளை குறைப்பதற்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இரவு நேரங்களிலும் சோதனைகளில் ஈடுபட்டதாக பொலிஸ் வீதி போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget