12,985 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு பிற்பகல் 5.00 மணியுடன் நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 60 வீதமான வாக்குப்பதிவுகளும்,
களுத்துறை மாவட்டத்தில் 65 வீதமான வாக்குப்பதிவுகளும்,
மாத்தளை மாவட்டத்தில் 72 வீதமான வாக்குப்பதிவுகளும்,
மாத்தறை மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப்பதிவுகளும்,
கேகாலை மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப்பதிவுகளும்,
திருகோணமலை மாவட்டத்தில் 74 வீதமான வாக்குப்பதிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 72 வீதமான வாக்குப்பதிவுகளும்,
காலி மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப்பதிவுகளும்,
புத்தளம் மாவட்டத்தில் 65 வீதமான வாக்குப்பதிவுகளும்,
நுவரெலியா மாவட்டத்தில் 75 வீதமான வாக்குப் பதிவுகளும்,
யாழ். மாவட்டத்தில் 67 வீதமான வாக்குப்பதிவுகளும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீதமான வாக்குப்பதிவுகளும்,
கண்டி மாவட்டத்தில் 72 வீதமான வாக்குப்பதிவுகளும்,
பதுளை மாவட்டத்தில் 45 வீதமான வாக்குப்பதிவுகளும்,
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 76 வீதமான வாக்குப்பதிவுகளும், திகாமடுல்ல மாவட்டத்தில் 73 வீதமான வாக்குப்பதிவுகளும்,
வன்னி மாவட்டத்தில் 74 வீதமான வாக்குப்பதிவுகளும்,
பொலன்னறுவை மாவட்டத்தில் 28 வீதமான வாக்குப்பதிவுகளும்,
கம்பஹா மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும், மொனராகலை மாவட்டத்தில் 73 வீதமான வாக்குப்பதிவுகளும்,
அநுராதபுர மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப்பதிவுகளும்,
குருணாகல் மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
வாக்கு எண்ணும் பணிகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 19 பேர்
கம்பஹா மாவட்டத்தில் 18 பேர்
களுத்துறை மாவட்டத்தில் 10 பேர்
கண்டி மாவட்டத்தில் 12 பேர்
மாத்தளை மாவட்டத்தில் 05பேர்
நுவரெலியா மாவட்டத்தில் 08 பேர்
காலி மாவட்டத்தில் 09 பேர்
மாத்தறை மாவட்டத்தில் 07 பேர்
ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07 பேர்
யாழ். மாவட்டத்தில் 07 பேர்
வன்னி மாவட்டத்தில் 06 பேர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பேர்
திகாமடுல்ல மாவட்டத்தில் 07 பேர்
திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர்
குருநாகல் மாவட்டத்தில் 15 பேர்
புத்தளம் மாவட்டத்தில் 08 பேர்
அனுராதபுரம் மாவட்டத்தில் 09 பேர்
பொலன்னறுவை மாவட்டத்தில் 05 பேர்
பதுளை மாவட்டத்தில் 09 பேர்
மொனராகலை மாவட்டத்தில் 06 பேர்
இரத்தினபுரி மாவட்டத்தில் 11 பேர்
கேகாலை மாவட்டத்தில் 09 பேர்
என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
Post a Comment