Ads (728x90)

இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று
நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ்த்
தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள், சிறைகளில் தடுத்து வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி குரல் எழுப்பியிருந்தனர்.

“விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “வன ஜீவராசிகள் திணைக்கள ஆக்கிரமிப்பை எதிர்ப்பது பயங்கரவாதமா?”, “கஞ்சா கடத்தலை தடுக்க முற்பட்ட உதயசிவம் பயங்கரவாதியா?” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியவாறும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னையின் தலைவரும்,
நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னையின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget