Ads (728x90)

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான குளிரூட்டிய ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29, 30, 31 மற்றும் 01ஆம் திகதி ஆகிய நான்கு நாட்களுக்கு இந்த ரயில் சேவை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில் பயணிப்போர் ஆசனங்களை முற்பதிவு செய்து கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ரயில் சேவை கல்கிசையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கும், காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15 மணிக்கும் சேவையில் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget