எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பரீட்சார்த்திகளை அழைத்து வரும் பெற்றோர் பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.
இடைவேளை நேரத்திலும் இவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முடியும்.
மேலும் இவ்வருடம் க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை எடுக்கும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக நிரப்ப வேண்டிய ஒன்லைன் படிவத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாக இந்த ஒன்லைன் படிவத்தை நிரப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் படிவத்துக்கு பின்வரும் இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும் – https://info.moe.gov.lk/

Post a Comment