Ads (728x90)

யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 149.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று காலையிலிருந்து தற்போது வரை யாழில் 149.3மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. யாழ். நகரப்பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்து வரும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும். வட பகுதியில் 100 மில்லி மீற்றர் மழை எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

குறித்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதோடு கடல் தொழிலுக்குச் செல்வோர், தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget