நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் கவனத்தை செலுத்துவதற்காக பிரிட்டன் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கும் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆரம்ப அமர்விற்கான அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையையும், சிரியாவையும் பிரிட்டன் அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ள டொமினிக் ரப் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கவனத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்காக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை திட்டமிட்ட அடிப்படையில் மீறுபவர்களை பொறுப்புக் கூறச்செய்யும் வலுவான சர்வசே அமைப்பினை நாங்கள் விரும்புகின்றோம். மனித உரிமை பேரவை தனது பணியை முழுமையாக செய்ய வேண்டும் அல்லது அதன் நற்பெயர் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment