Ads (728x90)

சர்வதேச சமூகத்தின் ஆதரவை அரசாங்கம் இழக்கும் வகையில் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் செயற்படக்கூடாதென வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பிராந்தியத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது பெரும்பான்மையின மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்தையும், அதன் திட்டங்களையும் வடக்கு-கிழக்கு மக்களும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஒற்றையாட்சி நிலையை பாதுகாப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget