Ads (728x90)


 இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் செளதி அரேபியாவில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள குறித்த அமைப்பு, 18 மாதங்களாக குறித்த பணிப்பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்காக எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்களுள் மூன்று சிறு குழந்தைகளும் உள்ளதாகவும் அவர்கள் அனைவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget