Ads (728x90)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 03 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்திற்கு 24 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் 23 பேரின் ஆதரவு இருந்தால் வரவு-செலவுத் திட்டம் நிறைவேறும் என்ற நிலையில், வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 02 பேரும்,  ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரும் என 24 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 03 பேரும், ஐக்கிய தேசிய கட்சியின் இருவரும் என 21 பேர் எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையில் யாழ்.மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 03 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget