Ads (728x90)

நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர ராமன்ய  பௌத்த பீடாதிபதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இல்லாவிட்டால் பௌத்த சங்கசாசனத்தை பிரகடனப்படுத்தவேண்டிய நிலையேற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர்கள், 20வது திருத்தத்தை இரத்துச் செய்யவேண்டும் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதை கைவிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவை தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிகளை தீர்க்க உதவாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget