Ads (728x90)

 

சித்திரை

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சாதிக்க நினைப்பதை சாதிப்பார்கள். ஆனால் சாதிக்க சிரமப்பட வேண்டியது இருக்கும். இதனால் பலரது பகையை சந்திக்க நேரிடும். அதிகம் கோபப்படும் இவர்கள் இடத்திற்கு தகுந்த மாதிரி நடந்து கொண்டால் வாழ்க்கை பிரகாசிக்கும்.

வைகாசி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். வாழ்க்கையில் துன்பம், இன்பம் என இரண்டையும் அனுபவிப்பார்கள். மற்றவர்களது விஷயத்தில் தலையிடமாட்டார்கள். இவர்களது கையில் பணம் நிற்காது. இவர்களுக்கு படிப்பது பிடிக்காது என்றாலும் படித்தவர்களைவிட புத்திசாலியாக நடந்து கொள்வார்கள்

ஆனி

இவர்கள் புத்திசாலிகள். இவர்களை சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைத்துக் கொள்ள நினைப்பார்கள். மற்றவர்களை அடக்கி ஆள முயற்சிப்பார்கள். கோபக்காரர்களாக இருந்தாலும் நகைச்சுவை மிக்கவர்கள்.

ஆடி

இவர்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு செயல்படுவார்கள். வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு பிடித்தவர்கள் யாராவது எதாவது செய்துவிட்டால் உலகமே முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.

ஆவணி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சிக்கனமாக இருப்பார்கள். கடன் வாங்கப் பிடிக்காது. இவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் விரைவில் பணக்காரர்களாக உயர்வு பெறுவர்.

புரட்டாதி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகள். நன்றாக படிப்பார்கள். இவர்கள் வசதியாக வாழப் பிறந்தவர்கள். இவர்களது வேகமான வளர்ச்சியைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.

ஐப்பசி

இவர்கள் சாதிப்பதில் வல்லவர்கள். பெரிய திட்டங்களையே தீட்டுவார்கள். உதவும் எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள்.

கார்த்திகை

பயந்த சுபாவம் கொண்ட இவர்கள் சிறு வயதிலேயே அனைத்து வித கஷ்டங்களையும் அனுபவித்து விடுவார்கள். ஆத்திரமடைந்து எதையாவது செய்து கொள்வார்கள்.

மார்கழி

எந்த விஷயத்திலும் தனித்தன்மை கொண்ட இவர்கள், செய்ய நினைக்கும் காரியத்தை செய்து காட்டாமல் விடமாட்டார்கள். ஆடம்பரத்தில் ஆர்வம் கொண்ட இவர்கள் பின்னர் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

தை

கஞ்சத்தனம் கொண்ட இவர்கள் எதிலும் வருமானம் வருமா என்று யோசித்துதான் செய்வார்கள். பெண்களை கண்டு கொள்ளமாட்டர்கள். காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்து வராது.

மாசி

அனைவரிடமும் சகஜமாக பழகும் இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். இவர்களிடம் யாரும் உண்மையை மறைக்க முடியாது. எப்போது எது செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்வார்கள்.

பங்குனி

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகமாக மனக் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். இந்த மனக் கஷ்டம் இவர்களை கெட்ட பழக்கங்களுக்கு அழைத்து செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன் கோபம் கொண்டவர்கள்.


Post a Comment

Recent News

Recent Posts Widget