இந்த சந்திப்பானது நேற்று காலை தலைநகர் மனிலாவில் உள்ள மலாகானாங் மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையிலுள்ள நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் மாநாட்டிலும் உரையாற்றியுள்ளார்.
உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகளால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிலிருந்து மீளுவதற்கு உள்நாட்டு முயற்சியும், வெளிநாட்டு உதவியும் தேவையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
Post a Comment