Ads (728x90)

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக இருந்த இளங்கோவன், வடமாகாண விவசாய பணிப்பாளராக இருந்த சிவகுமார் மற்றும் சுகாதார அமைச்சின் வடமாகாண செயலாளராக இருந்த செந்தில் நந்தனன் ஆகியோரால் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்  உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

வடக்கில் கடமையாற்றிய குறித்த மூன்று நிர்வாகசேவை அதிகாரிகளையும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வடமாகாண ஆளுநர் மாகாணத்தில் இருந்து விடுவித்திருந்தார்.

இவ்வாறு இவர்கள் மூவரும், ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என உயர்நீதிமன்றில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணை எடுக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்காளிகளினால் தமது இடமாற்றத்தின் நியாயப்பாடுகள் மற்றும் சட்ட வரம்பை மீறியமை தொடர்பில் போதிய ஆதாரங்களை முன்வைக்காமையால் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget