யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற பிரிபுபசார நிகழ்வில் கலந்து கொண்டு ஏற்புரை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக 2020 ஆம் ஆண்டு மாசி மாதம் 17ஆம் திகதி எனது கடமைகளை பொறுப்பேற்றேன்.
அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு பதவி உயர்வு, இடமாற்றம், ஓய்வு என்பன சாதாரண ஒரு விடயம். நான் வரும்போது தனியாகவே வந்தேன். எனது அனைத்து செயல்பாடுகளுக்கும் மாவட்டமே உறுதுணையாக இருந்தது.
மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் எனது சக்திக்கு உட்பட்டு என்னால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மக்கள் பணிகளையும் திருப்தியுடன் நிறைவேற்றி இருக்கிறேன்.
சுமார் 3,500 மில்லியனுக்கு மேல் பெறுமதியான மக்கள் நலத்திட்டங்கள், 140 மேற்பட்ட காணி அல்லாத மக்களுக்கு காணி வழங்கி வீட்டுத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்களை தமது சொந்த இடங்களில் குடியேற்றி இருக்கிறோம்.
அது மட்டுமல்லாமல் இவ்வருடம் உற்பத்தித்திறன் மற்றும் சமூக மேம்பாட்டு நிதியம் ஆகியவற்றில் தேசிய மட்டத்தில் இரு விருதுகளை யாழ்.மாவட்டம் பெற்றது.
இவ் வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இந்த இடத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். நான் மாவட்ட செயலகத்தில் அரச அதிபராக பணியாற்றிய காலத்தில் கொரோனா உட்பட பல்வேறு சவால்களை சந்தித்திருக்கிறேன்.
அத்தனை சவால்களையும் எதிர்கொள்வதற்கு மாவட்டத்தில் இருந்த பிரதேச செயலாளர்கள் மேலதிக அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள், ஊடகங்கள் என அத்தனை தரப்பினரது உதவிகளும் எனக்குக் கிடைத்தது.
ஆகவே யாழ்.மாவட்டத்தில் உயரிய பல சேவைகளை செய்த அரச அதிபர்கள் சேவை செய்த ஆசனத்தில் நானும் அமர்ந்து அரச அதிபராக மக்களுக்கான பணியை வழங்கியுள்ளேன் என்ற மன நிறைவுடன் செல்கிறேன் மீண்டும் சந்திப்போம் என்று தெரிவித்தார்.
Post a Comment