மேற்படி பரீட்சை 2022 டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றிருந்தது. இப்பரீட்சைக்கு 329,668 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதன்மூலம் 20,000 மாணவர்கள் உதவிப்பணம் பெற்றுக்கொள்ளவுள்ளனர். .
பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் உரிய சுட்டெண்ணை சரியாக வழங்குவதன் மூலம் பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என்பதுடன் உரிய பரீட்சைப் பெறுபேற்றை தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் 2023 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment