Ads (728x90)

உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் குறுக்கு நாணய பரிமாற்று வசதியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனூடாக மருந்துகள், உணவு மற்றும் பசளை உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக இந்நிதியளிக்கப்படவுள்ளது.

இதற்கமைய இலங்கையின் நாணய கையாள்கை மற்றும் ஏற்றுமதியில் 30 சதவீதத்துக்கும் அதிக பங்கை வகிக்கும் மூன்று தனியார் வங்கிகள் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக இந்த வசதியைப் பெறவுள்ளன.

இந்த நிதியுதவி முதலீட்டாளர் சமூகத்தில் நம்பிக்கையை அதிகரிப்பதுடன் இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஆதரவாக புதிய மூலதன வரவுகளை ஈர்க்கும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக தெற்காசியாவுக்கான நிதியியல் நிறுவகங்கள் குழுமத்தின் சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபன முகாமையாளர் ஜூன் பார்க் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget