Ads (728x90)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் திங்கள் 27ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

பெப்ரவரி 27 முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது மார்ச் மாதம் 08 ஆம் திகதியும் 09 ஆம் திகதியும்இலங்கை விவகாரங்கள்  கலந்துரையாடப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை உட்பட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன.

இந்த அமர்வில் இலங்கை, பெரு, பனாமா, எகிப்து, சாம்பியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் அறிக்கைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன

173 உறுப்பினர்கள் குழுவில் அடங்கும் இந்த 6 நாடுகளினதும் மீளாய்வை 18 சர்வதேச சுயாதீன நிபுணர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

இதில் மனித உரிமை மீறல்கள், பாலின அடிப்படையிலான வன்முறைகள், நீதித்துறையின் சுதந்திரம், இலங்கையில் அவசரகால நிலைகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நீதி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இவ்வமர்வில் பொது உரையாடல்கள் மூலம் விவாதிக்கப்படவுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget