இப்போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 138 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இந்தியாவும், இலங்கையும் தலா 137 ஓட்டங்களைப் பெற்றதால் சுப்பர் ஓவர் அறிமுகப்படுத்தப்பட்டது. சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3 - 0 என முழுமையாகக் சுவீகரித்தது.
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் முதலாவது ஆட்டத்தில் 43 ஓட்ட வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது.
Post a Comment