Ads (728x90)

ஜனாதிபதி நிதியத்தின் கீழ் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான ஓகஸ்ட் மாதத்திற்குரிய புலமைப்பரிசில் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் இன்று நேரடியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு இது குறித்து குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

2022 மற்றும் 2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்று, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தகுதிபெற்ற 3,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா வீதமும், தரம் 01 முதல் தரம் 11 வரை தகுதிபெற்ற 3,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா வீதமும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் உரியவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget