அரச பாடசாலைகள், அரச அனுசரணையுடைய தனியார் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் ஏனைய விசேட பாடசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மூன்று வருட காலத்துக்கான “சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை நேற்று முதல் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது.
“சுரக்ஷா” காப்புறுதியை மாணவர்களுக்கு வழங்குவதற்காக 711 கோடியே 20 இலட்சம் ரூபாவை முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து "சுரக்ஷா" மாணவர் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் கல்வி அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் திலக்கா ஜயசுந்தரவும், காப்புறுதிக் கூட்டத்தாபனத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி ப்ரியந்த பெரேராவும் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
Post a Comment