Ads (728x90)

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து   இந்திய அரசின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் மக்களின் ஆணையினை வென்றமைக்காக பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

பல நாகரிக ஒற்றுமைகளை கொண்டுள்ள இரட்டையராகவும் நமது இரு நாடுகளினதும் மக்களது செழுமைக்காக உறவுகளை மேலும் வலுவாக்க உறுதிபூண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் ஜப்பான் தூதுவர் ஆகியோரும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget