Ads (728x90)

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுக்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இலங்கை மக்கள் தாம் பெருமைப்படக்கூடிய சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தலின் மூலம் தங்களை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதாகவும் தனது வாழ்த்துச் செய்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

இந்தோ பசுபிக்கில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு தங்களுடன் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget