Ads (728x90)

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 36 ஓவர்கள் முடிவில் 189 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இன்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 ஓவர்கள் 02 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

இதேவேளை இந்த போட்டி மழை காரணமாக 44 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

மேலும் இரு அணிகளுக்குமான  மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி பல்லேகெலாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget