நேற்று தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நீதியமைச்சர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் என்பவர் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பைக் கொண்டவர் அல்ல. வழக்குகள் தொடர்பில் தலையிடவும் முடியாது
வழக்குகள் தொடர்பான விடயங்களுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் என்பன இருக்கின்றன.
அவர்களின் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்குத் தேவையான மனித வளம் உள்ளிட்ட ஏனைய வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே நீதியமைச்சின் வேலையாகும் என்றும் அமைச்சர் ஹர்சண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Post a Comment