Ads (728x90)

10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கலாநிதி அசோக ரங்வல தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் முன்மொழிய, அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.

இதேவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவரது பெயரை முன்மொழிய, அதை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வழிமொழிந்தார்.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் ஆளும் கட்சியின் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நலிந்த ஜயதிஸ்ஸவும் நியமிக்கப்பட்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget