Ads (728x90)

2024 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறின்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.

வங்கக்கடலில் எதிர்வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

எனவே பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை தவிர்த்து மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தலைமையில், பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட தேசிய மட்டத்திலிருந்து மாவட்டம் மட்டம் வரையிலான அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தும் வேலைத்திட்டம் அண்மையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. 

பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களான 0113 668 020 / 0113 668 100 அல்லது 0113 668 013 / 0113 668 010 மற்றும்076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget