காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒரு பொது தினத்தை ஒதுக்கிய போது, 50வீதமான மக்கள் அரசாங்க அதிகாரிகளின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அரச அதிகாரிகள் எவ்வாறு கோப்புக்களை மறைக்கிறார்கள், எப்படி லஞ்சம் பெற்று வேலை பெறுகிறார்கள் என்பது தொடர்பில் மக்கள் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வேலை செய்யும் உத்தியோத்தர்களின் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மக்கள் சுனாமியால் மோசமான அரசியலை துடைத்தெறிந்தது போல் அடுத்த சுனாமி அரச துறைக்கு வரும் என குறிப்பிட்ட அமைச்சர், அந்த சுனாமியை தன்னால் உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment