Ads (728x90)

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும், கோட்டை மாக்கும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்திற்கும் இடையில் இன்று முதல் விசேட சொகுசு பேரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் வழங்கியுள்ளது.

விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் 10 தடவைகள் இப்பேரூந்து சேவைகள் நடாத்தப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த பேரூந்து சேவைக்கான கட்டணமாக 450 ரூபா அறவிடப்படவுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget