Ads (728x90)


அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ”கோல்ட் கார்ட்” (தங்க அட்டை) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டொலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ”கோல்டு கார்ட்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

செல்வந்த வெளிநாட்டினர் 5 மில்லியன் டொலர் கட்டணத்தில் அமெரிக்க குடியுரிமையைப் பெறலாம் என்றும், இது அவர்களுக்கு அமெரிக்காவில் வசிக்கும் உரிமையையும், வேலை செய்யும் மற்றும் வணிகம் செய்யும் உரிமையையும் வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த திட்டம் இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget