எனினும் அந்த கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி 169 ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது. கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு 144 ஆசனங்கள் கிடைத்துள்ளன. புளொக் குபெக்வா கட்சி 22 ஆசனங்களையும், என்டிபி கட்சி 7 ஆசனங்களையும், கிறீன் கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
மார்க் கார்னியின் லிபரல் கட்சி 169 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் பெரும்பான்மைக்கு 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் லிபரல் கட்சி நான்காவது முறையாகப் பதவியேற்கவுள்ளது.
வெற்றி உரையில் வாஷிங்டனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கனடாவின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கார்னி வலியுறுத்தினார்.
அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவிற்கு வந்துவிட்டதாக கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார் அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என தெரிவித்துள்ள மார்க் கார்னி, இது ஒருபோதும் நடக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
அதோடு அமெரிக்கா எங்கள் வளங்களை நாட்டை தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது என நான் பல மாதங்களாக எச்சரித்துவந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ள கனடா பிரதமர், இது பெரும் துன்பியல் நிகழ்வு எனவும், அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு சுதந்திர,இறைமையுள்ளதேசங்களின் எதிர்காலம் குறித்து நான் விரைவில் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன், உலகிற்கான தலைமைத்துவத்தின் முன்னணியில் இருப்பதற்கு அமெரிக்கா விரும்பாவிட்டால் கனடா அதனை செய்யும் நாங்கள் வலுசக்தி வல்லரசாக மாறுவோம் எனவும் கனடாவின் புதிய பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.
Post a Comment