2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியை தேசிய மக்கள் சக்தி தனதாக்கியுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களில் 265 மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 3,927 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியூடாக தெரிவாகியுள்ளனர்.
எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் 14 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே முன்னிலை பெற முடிந்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 377 ஆசனங்களுடன் 35 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலிஇல் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அதிகப்படியான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 4.94 மில்லியன் வாக்குகளைப் பெற்று நாட்டின் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2025 இல் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 954,517 வாக்குகள், 742 உறுப்பினர்களை பெற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது.
Post a Comment