Ads (728x90)

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு, வன்முறைக் கும்பலினால் பொது நூலகம் தீயூட்டப்பட்டது. இதன்போது அங்கிருந்த பல பாரம்பரிய நூல்கள் தீயினால் அழிவடைந்தன.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில் அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது. 

1933 ஆம் ஆண்டு கட்டியெழுப்பப்பட்ட யாழ்ப்பாண நூலகம் முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டு மிக விரைவில் மக்களின் ஆதரவுடன் அது வளர்ச்சியடைந்தது.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பழமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. 

1981 ஆம் ஆண்டு தீயூட்டி எரிக்கப்பட்டதன் பின்னர், 2004 ஆம் ஆண்டில் நூலகம் புனரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்டது. தற்போது யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் 3 மொழிகளிலும் 145,000 நூல்கள் உள்ளன. 


Post a Comment

Recent News

Recent Posts Widget