Ads (728x90)

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி விடுவிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்தவினால் யாழ். மாவட்ட செயலாளர் பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளர் கருத்து தெரிவிக்கையில், வலி வடக்கு வயாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும், மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கற்கோவளம் பகுதியில் 5.7 ஏக்கர் காணியுமாக மொத்தம் 40.7 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, தெல்லிப்பளை ஜே/233 பகுதியில் 47 குடும்பங்களும் வயாவிளான் பகுதியில் 55 குடும்பங்களும் தமது பூர்வீக நிலங்களுக்கு செல்லவுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget