வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அண்மையில் சிறப்பு ஆய்வு விஜயம் மேற்கொண்டபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கன், அடம்பன், வங்காலை, நானாதன், சிலாவத்துறை ஆகிய பிராந்திய வைத்தியசாலைகளுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் விஐயம் மேற்கொண்டார்.
ஒவ்வொரு பிராந்திய மருத்துவமனைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள் தற்போதைய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை முன்வைக்க ஒரு வாய்ப்பை வழங்கவும் அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.
சுகாதார ஊழியர்கள் மருத்துவமனைகளில் உள்ள பௌதீக மற்றும் மனித வளப் பற்றாக்குறைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கனர். மேலும் உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் நீண்ட ஆலோசனை நடத்தினார், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தார்.
இந்தப் பகுதிகளில் தற்போது தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்கள் இரண்டிலும் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பு இருப்பது இங்கு தெரியவந்தது. இதில் சிறப்பு கவனம் செலுத்திய அமைச்சர், பொதுமக்களுக்கு சுகாதார கல்வி திட்டங்களை முறையாக செயல்படுத்தவும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
வட மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருந்துகள் தீர்ந்து போகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு வட மாகாணத்தில் உள்ள முறையான வழிமுறை குறித்து கேட்டறிந்த அமைச்சர், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளையும் வழங்கி அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வது சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரின் பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment