முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று நாட்டில் தேசிய பிரச்சினையொன்று இல்லையென்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பயணிக்கின்ற நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாக அவர் கூறும் சூழ்ச்சிக்குள் எழுச்சிபெற்றுள்ள தமிழ்க் கட்சிகள் சிக்கிவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2024 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல், அதன்பின்னரான பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறான பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தன.
ஆனால் கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை வட, கிழக்கு மக்கள் தூக்கி எறியச் செய்து தமிழ்க் கட்சிகள் வாக்கு வங்கிரீதியாகவும், மக்களின் ஆதரவுத் தளத்திலும் மீளெழுச்சி அடைந்திருக்கின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான சீர்திருத்தவாத தீர்வினை முன்வைப்பதற்கு பதிலாக, போலியான மார்க்சிய வாதத்தினை மீளப்புதிப்பிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளார்.
அனைவருக்கும் சமூகப்பொருளாதாரப் பிரச்சினைகளே இருக்கின்றன என்ற சிந்தனையையும் தோல்வியடைந்த தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பேரினவாதப்போக்கில் தேசியப் பிரச்சினையொன்று இல்லையென்ற சிந்தனையையும் அநுர தலைமையிலான அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
Post a Comment