Ads (728x90)

டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை ஊடாக ஊழல் புற்றுநோயை சமூகத்திலிருந்து ஒழிக்க முடியுமென பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசாங்கத்தின் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமான அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமான ''Govpay'' ஐ உயர்நீதிமன்ற கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதம நீதியரசர் இதனை தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அனைத்து விதமான கொடுப்பனவுகளையும் இந்த மென்பொருளை பயன்படுத்தி மேற்கொள்ள முடியும். 

இதற்கமைய வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கட்டணங்கள், சான்றளிக்கப்பட்ட நகல் கட்டணங்கள், வணிக மேன்முறையீடு தாக்கல் கட்டணங்கள், நட்டயீடு, முறைப்பாடளித்தல் கட்டணங்கள், மற்றும் சத்தியப்பிரமாணங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட பல கொடுப்பனவுகளை இதன் மூலமாக இலகுவாக செலுத்த முடியும்.

இந்த டிஜிட்டல் கொடுப்பனவு தளத்தின் ஊடாக சட்டரீதியான பணக் கொடுக்கல் வாங்கல் முடிவு கொண்டு வரப்படுகிறது.

கடந்த 200 வருடங்களாக நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் நீண்ட வரிசைகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை நிரப்புதல் உள்ளிட்ட பாரம்பரிய முறைமைகள் இதன் மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படுகிறது.

அதேபோன்று சமூகத்தையும், முழு அரச கட்டமைப்பையும் சீர்குலைக்கும் கொடிய புற்றுநோயாக கருதப்படும் ஊழலை இந்த டிஜிட்டல் கொடுப்பனவு தளத்தின் பயன்பாட்டின் ஊடாக இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளதாக நான் நம்புகிறேன். எம்மால் குறுகிய காலப்பகுதிக்குள் ஊழல் இல்லாத சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget