குறித்த நகைகளை தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பி பரிசோதித்து அறிக்கைப்படுத்துமாறும் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் துறை சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.
குறித்த ஆபரணங்கள் கடந்த 02 ஆம் திகதி கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் வைத்து பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.
இதன்போது பதில் பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பேற்கப்பட்ட குறித்த ஆபரணங்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் அதன் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment