எனவே விமல் வீரவன்சவுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளோம் என இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமல் துஷார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிலையில் ஊழல்வாதிகள் பலர் தற்போது கலக்கமடைந்து ஆணைக்குழுவிற்கும், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கும் எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 118 ஆவது பிரிவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் வெளியாட்கள் தலையிடுவதும், ஆணைக்குழுவை அவமதிப்பதும் குற்றச்செயலாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கருத்து ஆணைக்குழுவை அவமதிப்பதாகவும், மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
ஆட்சியில் இருக்கும் போது அரச அனுசரணையுடன் அரச நிதியை மோசடி செய்த ஊழல்வாதிகள் தற்போது கலக்கமடைந்துள்ளார்கள். சுயாதீன ஆணைக்குழு ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊழல் இலஞ்ச மோசடியால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது என்றார்.
Post a Comment