Ads (728x90)

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் மாத்திரமே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் தாம் கலந்துரையாடியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்த தரப்பினருடனும் கலந்துரையாடப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை தமிழரசு கட்சியின் தலைவருடனான சந்திப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தங்களது கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஆட்சியமைப்பதற்காக வேறு கொள்கைகளைக் கொண்டவர்களுடன் அணிதிரள்வதை இலங்கை தமிழிரசுக் கட்சி நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget