Ads (728x90)

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கேகாலை நகரில் நேற்று வியாழக்கிழமை உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கையில் ரயில்வே நிலையங்களிடையே மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சிறந்த பசுமை புகையிரத நிலைத்திற்கான போட்டியில் திருகோணமலை புகையிரத நிலையம் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

திருகோணமலை புகையிரத நிலைய தலைமை அதிபர் தி. சர்வேஸ்வரன், ஜனாதிபதி அனுரா குமாரா திஸாநாயக்க அவர்களினால் தங்க விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தினை உக்குவெல மற்றும் பாதுக்க புகையிரத நிலையங்களும், மூன்றாம் இடத்தினை மாத்தறை,புகையிரத நிலையமும் பெற்றுக்கொண்டது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget