Ads (728x90)

சாவகச்சேரி நகர சபை தவிசாளராக போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளார்.

சாவகச்சேரி நகர சபை தவிசாளர் தெரிவு இன்று சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

அதன் போது தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர்கள் தலா 7 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் தவிசாளராக தெரிவானார்

அதே போன்று உப தவிசாளர் தெரிவின் போதும், தமிழரசு மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்கள் 07 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஞா. கிஷோர் தெரிவானார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget