Ads (728x90)

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், தீய விடயங்களைத் தடுப்பதற்குப் போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஓய்வுபெறுவதை முன்னிட்டு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகப்படியான நுகர்வு மற்றும் ஊழலால் பாதிக்கப்பட்ட அரச சேவைக்குப் பதிலாக, மனிதாபிமானத்துடனும் உணர்திறன் உடையவராகவும் தமது பொறுப்புகளை நிறைவேற்றும் அரச சேவையே நாட்டிற்கு அவசியம். 

அரச சேவையானது மக்களுடன் தொடர்பில்லாத ஒரு பொறிமுறையாக இருக்கக்கூடாது. அத்துடன் தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அந்தத் தீர்மானங்கள் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எப்போதும் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget