Ads (728x90)

குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், சிவில் சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் போது பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த மே மாதம் 10 ஆம் திகதி குமுழமுனை - தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் காணியின் உரிமையாளர் தனது பணியாட்களை கொண்டு உழவியந்திரத்தின் மூலம் குருந்தூர் மலை பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி தேரரொருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய இரண்டு விவசாயிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியே போராட்டம் நடத்தப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget