முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைப்பதற்கும் உருவாக்கப்பட்ட வரைவு மசோதாவை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
வளமான நாடு - அழகான வாழ்க்கை என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கும், ஐந்து ஆண்டு பதவிக் காலத்திற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்களை இரத்து செய்வதற்கும் அரசாங்கத்தின் ஆணையை பொதுமக்கள் ஆதரித்துள்ளனர்.
அதன்படி இந்த சட்ட சீர்திருத்தத்தை செயற்படுத்த இரண்டு வரைவு மசோதாக்களைத் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
Post a Comment