Ads (728x90)

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கான சட்ட கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அதற்கான எல்லை நிர்ணய செயல்முறை இதுவரை நிறைவடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய தேர்தல் முறைமைக்கான வரைவு விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது.

அதற்கான சட்ட வரைவை விரைவாக நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget