Ads (728x90)

இலங்கை அவசரகால மருத்துவர்கள் கல்லூரியின் வருடாந்த மாநாடு - 2025 இன்று கொழும்பு  கலதாரி ஹோட்டலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்றது.

அவசர மருத்துவ சேவைகளை மருத்துவமனைகளோடு மட்டும் மட்டுப்படுத்த முடியாது என்றும், தேவைப்படும் அனைத்து இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வலுவான அவசர சிகிச்சை முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இது அனைவருக்கும் அணுகக்கூடியது என்றும், இந்தக் கனவை நனவாக்க அரசாங்கம் பல தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

இந்த ஆண்டு வருடாந்த மாநாட்டின் கருப்பொருள் "இலங்கை முழுவதும் அவசர மருத்துவத்தின் எதிர்காலத்தை இணைத்தல்" என்பதாகும். 

இலங்கை அவசர மருத்துவக் கல்லூரி, சர்வதேச நிபுணர்கள் மற்றும் உள்ளூர் பயிற்சியாளர்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற குழுவை ஒன்றிணைத்து, அவசர மருத்துவத்தின் அண்மைக்கால முன்னேற்றங்கள் மற்றும் முக்கியமான தலைப்புகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

உலகளவில் திறமையானதாக மட்டுமல்லாமல், சமமான மற்றும் மீள்தன்மை கொண்ட ஒரு சுகாதார அமைப்பை நோக்கிய பயணத்தில் அவசர சிகிச்சை சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த திட்டம் சிறிய  மருத்துவமனைகள் கூட அவசியமான நேரத்தில் அவசர சிகிச்சையை பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதாக அவர் தெரிவித்தார். 

ஒவ்வொரு குடிமகனும் எந்த இடத்தில் இருந்தாலும் அடிப்படை சிகிச்சையை அணுக முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget