Ads (728x90)

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சம்பிக ரணவக்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அனைத்து கள்வர்களும் ரணிலை கைது செய்யதவுடன் அச்சத்தில் ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் இணைந்தால் கள்வர்களை கைது செய்வது இன்னும் இலகுவாகும் என தொழிற் பயிற்சிகள் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியினதோ, பாராளுமன்றத்தினதோ அல்லது அமைச்சர்களினதோ கடமையல்ல. அதற்காக பிரத்தியே நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆட்சி காலங்களில் இந்த நிறுவனங்கள் அப்போதைய ஆட்சியாளர்களின் இரும்பு பாதணிகளுக்கு இரையாகியிருந்தன. 

இதன் காரணமாக கடந்த காலங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்பட்டு இவர்கள் தப்பித்துக் கொண்டனர்.

ஆனால் தற்போது எமது ஆட்சியில் அவ்வாறான நிலைமை இல்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை.

எனவே ஆளுங்கட்சியானாலும், எதிர்க்கட்சியானாலும் சட்டம் அனைவருக்கும் சமமாக பிரயோகிக்கப்படுகிறது. வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இவ்வாறு பாகுபாடின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ரணில் விக்கிரமசிங்க இழைத்த குற்றங்களையும், தவறுகளையும் மறைக்க முடியாது. அவர் இழைத்த குற்றங்களில் ஒன்றுக்கு மாத்திரமே விளக்கமறியல் சென்றார். ஆனால் இன்னும் பல கிடப்பில் உள்ளன. 

இவர்கள் தம்மை பிரபலங்கள் எனக் கூறிக் கொண்டு நாட்டில் தேசிய சொத்துக்களை அழித்தவர்களாவர். அவர்கள் இன்று பிரபலங்கள் என்ற நிலையிலிருந்து இறக்கப்பட்டு சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அவர்களுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் கள்வர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர் என்றார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget