Ads (728x90)

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் சஹின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் 134 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget